வடமதுரை : புதுகலராம்பட்டி - ராமநாதபுரம் இடையே 4 கி.மீ., துார ரோடு உள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் இந்த ரோட்டில் பல ஆண்டுகளாக புதுப்பித்தல் பணி நடக்கவில்லை. புதுகலராம்பட்டியில் பாலம் சேதமடைந்து இருந்தது குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இந்த ரோடு நெடுஞ்சாலைத்துறை கணக்கில் இல்லை என அத்துறையினர் கைவிட்டனர்.
வடமதுரை ஒன்றியம் சார்பில் செட்டியபட்டி பிரிவில் இருந்து 1.5 கி.மீ., துாரம் ரோடு புதுப்பித்தல், சேதமான பாலம் சீரமைப்பு பணி நடந்தது. மீதமுள்ள 2.50 கி.மீ., துாரம் கிடப்பில் இருப்பதால் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். மீதமுள்ள துாரமும் ரோட்டை சீரமைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE