தேக்கடி:பெரியாறு அணைக்கு 20 ஆண்டுகளுக்குப்பின் தரைவழி மின்சாரம் வழங்க கேபிள் பதிக்கும் பணி துவங்கியது.
பெரியாறு அணைக்கு வல்லக்கடவில் இருந்து வரும் மின்சார கம்பியில் சிக்கி 2000ல் ஒரு யானை இறந்தது. இதனால் அணைப்பகுதிக்கு 2000 ஜூன் 19ல் மின் சப்ளையை கேரள மின்வாரியத்தினர் துண்டித்தனர். வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தரைவழி மூலம் கேபிள் பதித்து மின்சாரம் வழங்க தமிழக அரசு ரூ. 1.66 கோடியை கேரள மின்வாரியத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் செலுத்தியது.
இருந்த போதிலும் கேரள வனத்துறை அனுமதியளிக்கவில்லை.கடந்த வாரம் இதற்கான ஆய்வு பணிகள் நடந்தது. அதில் தமிழக கேரள அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் மின்கேபிள் உடனடியாக பதித்து மின்சப்ளை வழங்க உத்தரவிடப்பட்டது.பெரியாறு அணைப்பகுதியில் இருந்து வல்லக்கடவு வரையுள்ள 6 கி.மீ. துார வனப்பகுதியில் கேபிள் பதிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
ஓரிரு மாதத்தில் பணிகள் முடிந்து பெரியாறு அணைக்கு மின்சப்ளை வழங்கப்படும். 20 ஆண்டுகளுக்குப்பின் மின்சப்ளை கிடைக்க உள்ளது தமிழக விவசாயி களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE