விருத்தாசலம்:அரை நிர்வாண கோலத்தில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். கடலுார் மாவட்டம், குருக்கத்தஞ்சேரியை சேர்ந்த செல்வராஜ் மனைவி சாந்தி, 42 ; செல்வராஜ் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
சாந்தி தனியார் மருத்துவமனையில் துாய்மை பணியாளராக பணி புரிந்தார்.இந்நிலையில், காலையில், வீட்டு வாசலில் கோலம் போடும் சாந்தி, நேற்று காலை வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அருகிலிருந்தவர்கள், வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, அரை நிர்வாண கோலத்தில், கழுத்து, வயிற்று பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். விருத்தாசலம் போலீசார் விசாரித்தனர்.
கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். அரை நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்ததால், பலாத்காரம் செய்யபட்டு கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE