திருப்பூர்:திருப்பூர் தெற்கு ஆர்.ஐ., அன்பரசு, கலால் உதவி கமிஷனர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்த பத்மபிரியா, நல்லுார் ஆர்.ஐ., ஆக மாற்றப்பட்டுள்ளார்.நல்லுாரில் இருந்த மைவிழி, கலெக்டர் அலுவலகத்துக்கும், தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்த சத்தியசெல்வி, தாராபுரம் கன்னிவாடி ஆர்.ஐ.,யாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
கன்னிவாடி ஆர்.ஐ.,யாக இருந்த ஜாபர்அலி, திருப்பூர் தெற்கு உள்வட்ட ஆர்.ஐ.,யாக மாற்றப்பட்டுள்ளார். குறிச்சிக்கோட்டையில் இருந்த கணேஷ்வரி, குண்டடம் உள்வட்டத்துக்கும், அங்கிருந்த ராஜேஸ்வரி குறிச்சிக்கோட்டை உள்வட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்த ரங்கநாயகி, உடுமலை தாலுகா அலுவலகத்துக்கும், குண்டடத்தில் இருந்த, முன்னாள் ஆனந்தராஜ் ஆதிதிராவிடர் நல அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE