திருப்பூர்:இளைஞர் பாராளுமன்ற திட்டத்தின்கீழ் பதிவு செய்ய பள்ளி மாணவர்களுக்கு டிச., வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மாணவர்களின் ஒழுக்கம், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள், மாறுபட்ட கருத்துகளை சகித்துக்கொள்வது மற்றும் மாணவர் சமூகத்தை வழிநடத்துதல் மற்றும் பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் அறிதல் ஆகியன இதன் முக்கிய நோக்கம்.தற்போது அனைத்து வகை பள்ளிகளில், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, www.nyps.mpa.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்து இளைஞர் பார்லிமென்ட் திட்டத்தில் பெருமளவில் மாணவர்களை பங்கேற்க செய்யுமாறு அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.'கோவிட் 19' நிலைமையை கருத்தில் கொடு இளைஞர் பார்லிமென்ட் திட்டத்தில் பதிவு செய்வதற்கான கடைசி தேதியை டிச., 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்கள், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களை இத்திட்டத்தில் அதிகபட்ச பங்களிப்பு செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE