அவிநாசி:பொள்ளாச்சி, மாசாணியம்மன் கோவிலில் அம்மனுக்கு உபயமாக வழங்கப்பட்ட புடவை, அவிநாசி தாலுகாவில் உள்ள கோவில்களுக்கு வழங்கப்பட்டன.பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் உள்ள மாரியம்மனுக்கு, பக்தர்களால் புடவைகள் சாத்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அவை, அவிநாசி தாலுகாவை சுற்றியுள்ள, 64 கோவில்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கில் நேற்று நடந்தது.அவிநாசி, சேவூர், கருவலூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள, ஒரு கால பூஜை நடக்கும், 64 கோவில் பூசாரிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு கோவிலுக்கும், தலா, 60 புடவை வழங்கப்பட்டன.திருப்பூர், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, அவிநாசி கோவில் செயல் அலுவலர் லோகநாதன், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் செயல் அலுவலர் சரவணன், கருவலூர் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சந்திரமோகன் ஆகியோர் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE