அன்னுார்:ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள், தாலுகா அலுவலகத்தில், மனு கொடுத்தனர்.குப்பேபாளையம் ஊராட்சி, போடி திம்மம்பாளையம், ஆதிதிராவிடர் காலனி மக்கள், 50 பேர் நேற்று அன்னுார் தாலுகா அலுவலகத்தில், துணை தாசில்தார் மணிகண்டனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:எங்கள் காலனியில், நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலங்களில், மழைநீர் செல்லாமல், காலனிக்கு உள்ளேயே தேங்கி நிற்கிறது. கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. நோய் பரவுகிறது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.மனுவை பெற்ற, துணை தாசில்தார், 'அந்த இடத்தில், வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு செய்வர். அவர்களது அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE