திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், பல்லடம் தெற்குப்பாளையம் பிரிவு அருகே, சந்தனம், கறிவேப்பிலை உட்பட, 900 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகள் என்ற இலக்கை அடைய, திட்டக்குழுவினர் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கின்றனர். பருவமழையும், கை கொடுப்பதால், விவசாயிகள் ஆர்வத்துடன் மரக்கன்று வளர்க்க முன்வந்துள்ளனர்.பல்லடம் தாலுகா, தெற்குபாளையம் பிரிவு அருகில், சண்முகம் தோட்டத்தில் நேற்று, 72வது நிகழ்வாக, மரக்கன்று நடப்பட்டன. தோட்ட உரிமையாளர் சண்முகம், ராமசாமி, முத்தம்மாள், சுப்பிரமணியம், திராவிட செல்வி, சிவானிஸ்ரீ, தருண் கீர்த்திக் மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் இணைந்து, மரக்கன்று நட்டு வைத்தனர்.சந்தனம், கருவேப்பிலை, குமிழ், மலைவேம்பு என, 900 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இத்திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோம், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE