திருப்பூர்:அரசு, அரசு உதவிபெறும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை படித்த, கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் அறிவுக்கூர்மையான குழந்தைகளை வட்டாரத்துக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து, அந்தந்தப்பகுதிகளில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்க வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல், அரசுப்பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினரின் குழந்தைகளில் இருந்து மாவட்டத்துக்கு 10 பேர் வீதம்(மூன்று மாணவியர் உட்பட) தேர்ந்தெடுத்து, அந்தந்தப்பகுதிகளில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்டங்களில் உள்ள கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களை, கட்டுமானத்தொழிலாளர்கள் இதுதொடர்பாக அணுகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE