திருப்பூர்:வனத்தையொட்டியுள்ள கிராமங்களில், வன விலங்குகளை அச்சுறுத்தும் வகையில், பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.வனத்துறையினர் கூறியதாவது:கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், வனத்தையொட்டி வசிக்கும் மலை கிராம மக்கள், முடிந்தவரை, அதிக ஒலி எழுப்பும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.பட்டாசு வெடித்தால், வன விலங்குகள் அச்சமடையும், மான் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் வெடிச்சத்தத்தால் பாதிக்கப்படுவதோடு, இயற்கையான சூழலும் குலையும்.இதுதொடர்பாக மலை கிராமங்களில், முகாமிட்டு, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வனத்திற்குள் சிலர் பட்டாசு கொண்டு சென்று வெடிக்கின்றனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE