திருப்பூர்:ரயிலில் முக கவசம் அணியாமல் செல்லும் பயணிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து. ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எப்.,) கூறியதாவது:தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றனர். கொரோனா பரவலால், பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். ஆனால், சில பயணிகள், முக கவசம் இன்றி பயணிக்கின்றனர். இதுதொடர்பாக பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.முக கவசம் அணியாதவர்களை கண்காணிக்கும் வகையில், ரயில் பெட்டிகளில், போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 'சிசிடிவி' உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், இது குறித்து பயணிகளை எச்சரிக்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE