பெ.நா.பாளையம்;தீபாவளி பண்டிகையையொட்டி, ஆனைகட்டியில், பல்வேறு தொண்டு அமைப்புகள் சார்பில், பழங்குடியின குழந்தைகளுக்கு, புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.'டிங்கிள் சேவா' மற்றும் 'பெண்ணிவிஸ் சொல்யூஷன்ஸ்' அமைப்பின் சார்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை ஆனைகட்டி வட்டாரத்தில் உள்ள ஏழு மலைவாழ் பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தீபாவளியை, பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.ரோட்டரி கிளப் கோவை மெரிடியன் தலைவர் சதீஷ்குமார், செயலாளர் லோகநாதன், அன்னுார் லயன்ஸ் கிளப் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், லயன்ஸ் கிளப் கன்சல்டன்ட் சுப்ரமணியம் மற்றும் டிங்கிள் சேவா அமைப்பின் நிறுவனர் சுரேஷ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE