உடுமலை:மாணவர்களுக்கான சமூக பார்வையை மேம்படுத்தும் நோக்கத்தில், பள்ளிகளில் இளைஞர் பார்லிமென்ட் திட்டம் செயல்படுத்த, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.பள்ளி செல்லும் மாணவர்கள், பாடப்புத்தகங்கள் சார்ந்த கல்வியை மட்டுமே கற்று அறிவது, அவர்களுக்கான எதிர்காலத்தை தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான வழிகாட்டுதலாக இருப்பதில்லை.மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்துவதற்கு மட்டுமின்றி, அவர்களுக்கான சமூக பார்வையை மேம்படுத்திக்கொள்ளவும், சிந்தனைகளை ஊக்குவிக்கவும், கல்வித்துறை புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதில் ஒன்றாக, புதிய திட்டமாக, இளைஞர் பார்லிமென்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் ஒழுக்கம், ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், மாறுபட்ட கருத்துகளை சகித்துக்கொள்வது, மாணவர் சமூகத்தை வழிநடத்துதல் மற்றும் பார்லிமென்ட் செயல்பாடுகளை அறிதல் இத்திட்டத்தின் நோக்கமாக, அறிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களை இத்திட்டத்தில் சேர ஊக்கப்படுத்த வேண்டும். இதில், www.nyps.mpa.gov.in என்ற இணையத்தளதில், மாணவர்கள் பதிவு செய்வதற்கு, ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் ஆலோசனை வழங்க வேண்டும்.இதுகுறித்து, திருப்பூர் மாவட்டத்தில், கல்வித்துறை அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இத்திட்டத்தில், பதிவு செய்வதற்கான கால அவகாசம், டிச., 31ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE