கோத்தகிரி;நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் மற்றும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை விவசாயத்தை நம்பி உள்ளனர்.கடந்த சில மாதங்களாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, குறைந்தபட்சம், 25 முதல் அதிகப்பட்சம், 32 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், தோட்டங்களுக்கு உரமிட்டு பராமரிப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நீலகிரியில், கடந்த சில நாட்களாக மழை பொய்த்த நிலையில், நேற்று முன்தினம் மட்டும் சில மணி நேரம் மழை பெய்தது.வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால், அறுவடைக்கு தயாரான தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கி வருவதால், பசுந்தேயிலை மகசூல் குறைய வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE