கூடலுார்:முதுமலை உள் வட்ட பகுதியில், வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றன.முதுமலை புலிகள் காப்பகத்தில் நடப்பு ஆண்டு, பருவமழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி, கார்குடி, முதுமலை, தெப்பகாடு, நெலாகோட்டை, மசினகுடி வனச்சரகங்களில், 5ம் தேதி துவங்கியது. இப்பணிகள் நேற்று முன்தினம், நிறைவு பெற்றது. வரும், 16ம் தேதி, முதுமலை வெளிவட்ட பகுதியில் விலங்கு கணக்கெடுப்பு பணி துவங்க உள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'ஏழு நாட்கள் நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பு பணியின் போது, நேரடியாக ஆறு புலிகளை பார்த்துள்ளனர். கணக்கெடுப்பு பணியின் போது, மொபைல் ஆப், டேட்டா சீட்டுகளில் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதனை ஆய்வு செய்து, வன விலங்குகள் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்படும். முதுமலை வெளிவட்ட பகுதியில், 16ம் தேதி வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்க உள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE