ஊட்டி:அதிக மதிப்பெண் பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்.ஊட்டி தொழிலாளர் உதவி ஆணையர் அறிக்கை:தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள், 5ம் வகுப்பு வரை படித்து அதிக மதிப்பெண் பெற்றிருந்தால், தனியார் பள்ளியில் சேர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வட்டாரத்துக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பெறலாம்.தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, ஊட்டி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE