கூடலுார்:கூடலுாரில், தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக பகலில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.கூடலுார் பகுதியில் நேற்று முன்தினம், காலை முதல், மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு மின்சப்ளை வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது, தொடர்ச்சியாக, இரண்டு நாட்கள் பகல் நேரங்களில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டதால், தீபாவளி நேரத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.மின்துறை அதிகாரிகள் கூறுகையில்,'சிங்கார -கூடலுார் உயர் மின் வழி பாதையில், மின்கம்பி சேதமடைந்ததால், அதனை சீரமைக்கும் பணிக்காக பகலில் மட்டும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. அவை சரி செய்யப்பட்டு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE