ஊட்டி:நீலகிரியில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தில் இயங்கும், 12 மின் நிலையங்களில், தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.நடப்பாண்டில், எதிர்பார்த்த அளவு மழை பெய்ததால், மாவட்டத்தில் உள்ள, 13 அணைகளில், 90 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது. தற்போது, தினசரி, 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், நீலகிரி மாவட்ட பயன்பாடு, 70 மெகாவாட். மீதமுள்ள, 530 மெகாவாட் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'பண்டிகை காலம் என்பதால், சமவெளி பகுதிகளுக்கு தடையின்றி கூடுதலாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் கூடுதலாக, 100 மெகாவாட் அதிகரிக்கப்பட்டு, 700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE