நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கத்தில் இருந்து கொத்வாபள்ளி வரை சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் விபத்துகள் நடக்கிறது. இதை தடுக்க சாலையோரம் வாகனங்களை நிறுத்த கூடாது என வர்த்தகர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.மேலும் சாலையோரம் வாகனங்களை நிறுத்த கூடாது. கடைக்கு வருபவர்கள் திரவுபதி அம்மன் கோவில் எதிரே உள்ள காலியிடம், ஜம்புலிங்கம் பூங்கா இடம், கொத்வா பள்ளியில் உள்ள சர்ச்சுக்கு அருகிலுள்ள காலியிடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். சாலையோரம் வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்து வழக்கு பதியப்படும். விபத்துகளை தவிர்க்க ஒத்துழைப்பு தர வேண்டுமென போலீசார் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்கின்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்குகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE