சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த செங்கல்மேடு கிராமத்தில் வேளாண்துறை நவீன நீர்ப் பாசன திட்டமயமாக்குதல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.கீரப்பாளையம் வட்டாரம் செங்கல்மேடு கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, வேளாண் வணிக அலுவலர் அமுதா தலைமை தாங்கினார். வட்டார வேளாண் வணிக உதவி அலுவலர் லோகநாதன் முற்றும் முன்னோடி விவசாயிகள் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்குதல் திட்டம்-2 நிலை கீழ் கொள்ளிடம் உபவடி நிலப்பகுதி செங்கல்மேடு விவசாயிகளுக்கு திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள், பயன்கள் பற்றியும், புதிய உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் அமைக்க விழிப்பு ஏற்படுத்தினர். வேளாண் உதவி அலுவலர் திருமுருகன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE