கடலுார்; ஊரக வளர்ச்சித் துறையினருக்கு, மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் மூலம் செயல்முறை படுத்துதல் குறித்த இணைய இயங்கலை பயிற்சி வகுப்பு, கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.பி.டி.ஓ., சங்கர் தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குனர், காணொளி காட்சி மூலம் ஊரக வளர்ச்சித் துறையை சேர்ந்த மாவட்ட, வட்டார மற்றும் கிராம ஊராட்சி அளவிலான அலுவலர்கள், துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள், ஊராட்சித் தலைவர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பினர், சுகாதார ஊக்குவிப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடி, வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவுநீரை பூமிக்கடியில் செலுத்துவது குறித்து பயிற்சியளித்தார். ஊராட்சி செயலர் சங்க தலைவர் வேலவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE