விருத்தாசலம்; வீட்டில் மாப்பிள்ளை பார்த்ததால், மனமுடைந்த இளம்பெண், குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.ஆலடி அடுத்த இருளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெம்புலிங்கம் மகள் வான்மதி, 17; இவருக்கு கடந்த சில வாரங்களாக வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் மனமுடைந்த வான்மதி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார். அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.நேற்று மோகம்பரிகுப்பம் செம்பையனார் குளத்தில், வான்மதி சடலமாக மீட்கப்பட்டார். சடலத்தை ஆலடி போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE