கடலுார்; முதுநகரில் லாட்டரி வியாபாரி குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார். கடலுார், முதுநகர் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கடந்த 21ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்த லாட்டரி சீட்டுகளை விற்ற முதுநகர், சராங்கு தெரு ராஜா, 48; என்பவரை கைது செய்ய முயன்றபோது, போலீசாரை திட்டி, பணி செய்ய விடமால் தடுத்தார்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, ராஜாவை கைது செய்தனர். இவர் மீது ஐந்து லாட்டரி சீட்டு வழக்குகள் உள்ளன. இவரது குற்றச் செயலை கட்டுப்படுத்த, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில், ராஜாவை ஓராண்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்திர சேகரசகாமுரி உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை சிறையில் உள்ள ராஜாவிடம் போலீசார் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE