கடலுார்; கொடிநாளையொட்டி அதிகளவு வசூல் செய்து சாதனை படைத்த வட்டார போக்கு வரத்து அதிகாரிக்கு, கலெக்டர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.கொடிநாளையொட்டி, 2015ம் ஆண்டு ரூ. 5 லட்சத்திற்கு மேல் வசூல் செய்ததற்கு தமிழக ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம், 2016ம் ஆண்டு ரூ. 3 லட்சத்திற்கு மேல் வசூல் செய்ததற்கு தலைமைச் செயலாளரின் பாராட்டுச் சான்றிதழ், பதக்கமும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனுக்கு, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்.கொடி நாள் நிதியிலிருந்து முன்னாள் படைவீரர் நெப்போலியன் மகள் கல்வி உதவி தொகைக்காக ரூ. 25ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வழங்கினார்.முன்னாள் படை வீரர் நலன் அலுவலக உதவி இயக்குனர் தெய்வசிகாமணி உடனிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE