கடலுார்; கடலுார் மாவட்டத்தில், நேற்று 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 23 ஆயிரத்து 667 பேர். சவுதியில் இருந்து காட்டுமன்னார்கோவில் திரும்பிய நபர் 1, பண்ருட்டி கர்ப்பிணி பெண் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 43 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்து 710 ஆனது. மேலும் 53 பேர் குணமடைந்ததால், இதுவரை 23 ஆயிரத்து 197 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதித்த 182 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 375 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 274 பேர் இறந்துள்ளனர். நேற்று இறப்பு இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE