மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டில் காட்சிப் பொருளாக உள்ள மினி டேங்க்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகரில் இரண்டு இடங்கள், காமராஜ், அம்பேத்கர் மற்றும் தேவி நகர்களில் தலா ஒரு இடம் என ஐந்து இடங்களில், அந்தந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மினி டேங்க்குகள் அமைக்கப்பட்டிருந்தன.தற்போது இந்த டேங்க்குகள் செயல்படாமல் வெறும் காட்சிப் பொருளாக உள்ளன. இதனால், இப்பகுதிகளில் குடிநீர் பிரச்னை எழுந்துள்ளது.எனவே, இதனைப் போக்க மினி டேங்க்குகளை சீரமைத்து குடிநீர் சப்ளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE