மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டில் பன்றிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பன்றிகள் அதிகளவில் பெருகி வருவதால் குடியிருப்பு பகுதிகளில் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.குடியிருப்பு பகுதியில் குப்பைகளைக் கிளறுவது, கழிவுநீர் குட்டையில் விழுந்து புரள்வது என தொற்று நோய் பரப்பும் அளவிற்கு அட்டகாசம் செய்வதுடன்.விளை நிலங்களில் மேய்ந்து பயிர்கள் மற்றும் பூச்செடிகளை நாசம் செய்கின்றன.பன்றிகள் மூலம் தொற்று நோய் பரவும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பன்றிகளைப் பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE