உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அடுத்த திருப்பெயர் தக்கா கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது.மாநில மகளிரணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன் தலைமை தாங்கி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ராஜேஷ், ஒன்றிய செயலாளர்கள் கோபி, சிவமணி, தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் முரளி, தொழிற்சங்க செயலாளர் செந்தில், நகர இளைஞரணி செயலாளர் இஜாஸ், பாசறை செயலாளர் ராஜிவ்காந்தி, ஒன்றிய தலைவர் தோமாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE