ரிஷிவந்தியம்; கீழத்தேனுாரில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலுார் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தேனுாரில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்திருந்தது. இதையொட்டி வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்காக, தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார்.தொடர்ந்து கட்டட பணிக்கான பூமிபூஜை நேற்று நடந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பூமி பூஜை நடத்தி, அடிக்கல் நாட்டினார். ஒன்றிய செயலாளர் பெருமாள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE