கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி வட்டார வள மையத்தில் நடந்த 'கற்போம்; எழுதுவோம்' கருத்தாளர் பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.பள்ளி சாரா வயது வந்தோர் கல்வித் திட்டம் மூலம் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக 'கற்போம்; எழுதுவோம்' இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டார வள மையத்தில் நடந்த கருத்தாளர்கள் பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது.மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்களுக்கு சின்னசேலம் ஒன்றியத்தைச் சேர்ந்த ராஜா, சரவணன் ஆகியோர் கருத்தாளராக இருந்து பயிற்சி அளித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா சிறப்புரையாற்றினார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) கோவிந்தராசு நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE