உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை பகுதியில் தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பஸ் நிலையம், மாணவர்கள் பயிலும் தொழிற் பயிற்சி நிலையங்கள், டோல்கேட் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனா ராணி தலைமையிலான வீரர்கள், பட்டாசு வெடிப்பது குறித்தும், எந்தெந்த இடங்களில் வெடிக்க வேண்டும்.பாதுகாப்பாக வெடிப்பது எப்படி என்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE