திருமங்கலம் : பயிர்காப்பீடு தேதி முடிவதற்கு முன்பு இயற்கை பேரிடர் ஏற்பட்டால் பயிர்காப்பீடு செய்வது அந்நாளோடு நிறுத்தப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ராபி பருவத்திற்கான பயிர்காப்பீடு கூட்டுறவு வங்கிகள், பொதுசேவை மற்றும் அரசு இசேவை மையங்கள் மூலம் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் நெல், பருத்தி, மக்காச்சோளத்திற்கு பயிர்காப்பீடு செய்யப்படுகிறது. டிச.,15 வரை பயிர்காப்பீடு செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. பயிர்காப்பீட்டிற்கான தேதி முடிவதற்குள் இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அன்றிலிருந்து புதிதாக பயிர் காப்பீடு செய்ய இயலாது என வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன், உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) செல்வம் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE