உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை பகுதியில் போக்குவரத்து விதி முறைகள் மீறி வாகனங்களில் சென்ற 96 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதையொட்டி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் நேற்று பஸ் நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது முகக் கவசம் அணியாமல் வந்தவர்களையும், ெஹல்மெட் அணியாதது, லைசென்ஸ் இல்லாமல் வந்தோர், விதிமுறைகள் மீறி வாகனங்களில் அமர்ந்து வந்தவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் மீறிய 96 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE