மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு மற்றும் மேல்சிறுவளூர் பகுதியில் சப் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
மூங்கில்துறைப்பட்டு எல்லையில் உள்ள தேவி நகர், மேல்சிறுவளூர் எல்லையில் உள்ள கோனத்தாங்கொட்டாய் பகுதிகளில் அரசு இடத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வரைமுறைப்படுத்தப்பட்ட இடங்களை கள்ளக்குறிச்சி சப் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார்.ஆய்வில் ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களின் ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டுகளை ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வேறு இடத்தில் சொந்தமாக வீடு உள்ளதா எனவும் விசாரணை நடத்தினார்.ஆய்வின்போது, தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை, வி.ஏ.ஓ.,க்கள் முருகன், கோவிந்தராஜ் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE