செஞ்சி; செஞ்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல் விளக்க முகாம் நடத்தினர்.செஞ்சி தீயணைப்பு நிலையம் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல் விளக்கம் செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் கருணைவேல், செயலாளர் சரவணன், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பி.டி.ஓ.,க்கள் சுப்பிரமணியன், அறவாழி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து செயல் விளக்கம் அளித்து, துண்டு பிரசுரம் வழங்கினர். இதில் ஒன்றிய அலுவலக ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE