திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே தாய் மற்றும் மகளை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குடுபி மகன் யாசின், 35; கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரம்மகுண்டம் கிராமத்தை சேர்ந்த ஷாப்ஜான் மகள் ஷப்னம், 25; என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 6 வயதில் மகன் மற்றும் மகள் உள்ளனர்.ஷப்னம் கணவர் யாசின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 10ந் தேதி வீட்டில் இருந்த ஷப்னம் மற்றும் மகள் யாஸ்மினை திடீரென காணவில்லை. விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரம்மகுண்டம் கிராமத்தை சேர்ந்த தங்கவேலு மகன் சங்கர் என்பவர் ஷப்னம் மற்றும் யாஸ்மினை கடத்தி சென்றது தெரியவந்தது.யாசின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE