புதுச்சேரி; சோனாம்பாளையத்தில் குடிநீர் பிரிவு அலுவலகத்தை தொழில்நுட்ப ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.புதுச்சேரி பொதுப்பணித் துறையில் 2744 தொழில்நுட்ப ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை பணிகளை புறக்கணித்து, உப்பளம் சோனாம்பாளையம் சந்திப்பில் உள்ள பொதுப்பணித் துறை குடிநீர் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன துணை செயலாளர் ஞானசேகரன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தில் நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.குடிநீர் பிரிவு பொதுப்பணித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நிலுவை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். வரும் 14ம் தேதி நடக்க இருந்த போராட்டத்தையும் வாபஸ் பெற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE