புதுச்சேரி; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், மரப்பாலத்தில் அமைந்துள்ள குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் 'வாக்கிங்' செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட உள்ளது. மேலும், பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., பாஸ்கர் முன்னிலையில், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தனர். கலெக்டர் அருண், ஸ்மார்ட் சிட்டி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவிப் பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE