புதுச்சேரி; அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரி வ.உ.சி., பள்ளி முன்னாள் மாணவர்களின் மனிதநேய அறக் கட்டளை சார்பில் சமூக சேவை விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ் வரவேற்றார். அறக் கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.விழாவில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் மாணவர் மணவாளனுக்கு 5 ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடம் பிடித்த அகிலனுக்கு 3 ஆயிரம் ரூபாய், மூன்றாம் இடம் பிடித்த சார்லஸ்க்கு 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆறுமுகம் ரங்கப்பிள்ளை பரிசு வழங்கி பாராட்டினார்.கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அறக்கட்டளை செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் விஜயராஜா, நிர்வாகிகள் சிவசங்கர், மணவாளன், இளஞ்செழியன், முனுசாமி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE