வில்லியனுார்; வாத்துப் பண்ணையில் கொத்தடிமையாக இருந்த சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் வாத்துப் பண்ணையில் கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள், குழந்தைகள் நலக்குழு மூலம் மீட்கப்பட்டனர். பண்ணையில் பணிபுரிந்த சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மங்கலம் கடை வீதியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்கத்தின் புதுச்சேரி பிரதேச குழு வில்லியனுார் கமிட்டி தலைவர் தெய்வானை தலைமை தாங்கினார். மாதர் சங்க தலைவர் சந்திரா, செயலாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதேசக் குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, இளவரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE