புதுச்சேரி; காலாப்பட்டு அருகே மின் கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டையை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தமிழ்செல்வன்,21. விக்கிரவாண்டி ஆவடியாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருட்செல்வம்,20. இருவரும் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் காலாப்பட்டு மாத்துார்-பிள்ளைச்சாவடி வழியாக சென்று கொண்டிருந்தனர்.தமிழ்செல்வன் பைக்கை ஓட்டினார். அருட்செல்வம் பின் சீட்டில் அமர்ந்திருந்தார். பைபிள் கல்லுாரி அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு, கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தமிழ்செல்வனை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அருட்செல்வத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE