புதுச்சேரி; திருபுவனையில் குடும்பத் தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.திருபுவனை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 30, ஜிப்மரில் தனியார் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மனோரஞ்சிதம், 27. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டபோது, மனோரஞ்சிதத்தின் தாய் ஜெயா மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்தனர். இந்நிலையில் நேற்று, மனோரஞ்சிதம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது தாய் ஜெயாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தனது மகள் மரணத் தில் சந்தேகம் இருப்பதாக திருபுவனை போலீசில் ஜெயா புகார் அளித்தார். அதன்பேரில், சந்தேக மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளில் இறந்ததால், தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE