புதுச்சேரி; தீபாவளி போனஸ் அறிவிக்காததை கண்டித்து, ஜிப்மர் ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.தன்னாட்சி நிறுவனமான ஜிப்மரில் 4 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்காததை கண்டித்து, ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் நேற்று நிர்வாக வளாகத்தை முற்றுகையிட்டனர்.போராட்டத்திற்கு ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் சங்க தலைவர் தமிழ்வாணன், பொதுச் செயலாளர் வேலு, பொருளாளர் மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர். ஜிப்மர் இயக்குனர் அலுவலகம் எதிரே ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை விலக்கி கொண்டனர். அதனை தொடர்ந்து, அரை மணி நேரத்தில் ஜிப்மர் ஊழியர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE