ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுாரில், கன மழையில் இடிந்து விழுந்த அரசு பள்ளியின் மதில் சுவரை சீரமைக்க வேண்டும்என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, கச்சிப்பட்டு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு, கச்சிப்பட்டு, காமராஜர் நகர், பட்டுநுால்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம், 23ம் தேதி பெய்த கன மழையின் போது, ஸ்ரீபெரும்புதுார்- - குன்றத்துார் நெடுஞ்சாலையோரம் உள்ள, இந்த பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. இடிந்த மதில்சுவர் வழியே ஆடு, மாடுகள்பள்ளியில் உலா வருகின்றன.பள்ளிகளை திறக்க, அரசு முயற்சித்து வரும் நிலையில், சுற்றுச்சுவர் இல்லாதது, மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்காது.பள்ளி திறக்கும் முன், இடிந்த மதில் சுவரை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE