உத்திரமேரூர்; தீபாவளியையொட்டி உத்திரமேரூரில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பஸ் நிலையத்தில், 'சானிடைசர்' வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல், உத்திரமேரூர் பஸ் நிலையத்தின், இரு நுழைவாயில் வழியாக நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு, கைகளை சுத்தம் செய்ய, பேரூராட்சி சார்பில், சானிடைசர் வழங்கப்பட்டது.கைகள் மட்டுமின்றி, இருசக்கர வாகனத்தின் கைப்பிடி மற்றும் வண்டியின் சாவிக்கும் சானிடைசர் வழங்கி சுத்தம் செய்ய அறிவுறுத்தினர்.தற்போது, பஸ் போக்குவரத்து துவங்கியுள்ள நிலையில், சானிடைசர் வழங்குவது ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது.மேலும், தீபாவளியையொட்டி, புத்தாடை, பட்டாசு, இனிப்பு வாங்குவது என, 'பர்சேஸ்' செய்ய உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமவாசிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், உத்திர மேரூர் பஸ் நிலையம் மற்றும் பஜார் வீதியில், பொதுமக்களுக்கு சானிடைசர் வழங்க வேண்டும் என, ோரிக்கை எழுந்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE