வேளச்சேரி; 'ஆன்லைன்' வகுப்புக்கு, புதிய மொபைல் போன் வாங்கி தராததால், மனமுடைந்த ஐ.டி.ஐ., மாணவன், தற்கொலை செய்து கொண்டார்.
வேளச்சேரி, நேரு நகரைச் சேர்ந்தவர் நிர்மலா மகன் புஷ்பராஜ், 16; உத்திரமேரூரில் உள்ள, ஒரு தனியார் ஐ.டி.ஐ.,யில் படித்து வந்தார்; ஒரு தங்கை உள்ளார்.இவர்களது தந்தை, நான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தாய், கூலி வேலை செய்து, இருவரையும் காப்பாற்றி வந்தார். புஷ்பராஜ், ஆன்லைன் வகுப்பு படிக்க, புதிய மொபைல் போன் கேட்டு உள்ளார்.நிர்மலா, ஒரு பழைய மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். மேலும், பணம் வந்தபின், புதிய போன் வாங்கி தருவதாக கூறி உள்ளார். இது தொடர்பாக, நேற்று முன்தினம், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில், மனமுடைந்த புஷ்பராஜ், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தரமணி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE