சென்னை; கொட்டும் மழையில், நலத்திட்ட உதவிகள் வழங்கியதால், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மாற்றுத்திறனாளிகள், பெரும் சிரமப்பட்டனர்.சென்னை கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், கலெக்டர் சீதாலட்சுமி தலைமை வகித்து, அவரது விருப்ப நிதியில் இருந்து, 1.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 சக்கர நற்காலிகளும், 10 மூன்று சக்கர சைக்கிள்களும் வழங்கினார்.நேற்று முன்தினம் முதல், சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், நலத்திட்ட உதவிகள் வழங்கியது, மாற்றுத் திறனாளிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.அத்துடன், கலெக்டர் அலுவலகம் வந்த, 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமப்பட்டனர்.இது குறித்து, உதவிகள் பெற்ற மாற்றுத் திறனாளிகள் கூறுகையில், 'கொட்டும் மழையில், கீழே தவறி விழும் சூழலில் வந்து, நலத்திட்டங்களை வாங்க வேண்டிய காட்டயத்திற்கு ஆளாக்கப்படுகிறோம்.'இதுபோன்ற அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும்போது, எங்களின் உடல் நலன்களையும் கருத்தில் வைத்து, நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE