ஈரோடு: ஈரோட்டில் இன்று மாலை முதல், இரண்டு இடங்களில் தீயணைப்பு வாகனங்களை, நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் என்பதால் ஈரோடு பஸ் ஸ்டாண்ட், கடை வீதி பகுதிகளில் அதிகளவில் மக்கள் கூடுவது வழக்கம், கடைகளில் பொருட்களை வாங்கவும், வெளியூர் செல்லவும் ஓரிடத்தில் குவிவர். அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து நிகழாமல் இருக்க, தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் தீயணைப்பு வாகனத்துடன் காத்திருப்பர். ஈரோடு ஆர்.கே.வி. ரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் முன்புறம் உள்ள பிருந்தாவன் லாட்ஜ் பகுதியில் தீயணைப்பு துறை வீரர்கள், 13 பேர் இரு வாகனங்களுடன் இரு இடங்களிலும் தயார் நிலையில் இருப்பர். இது தவிர ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் வாகனம், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் தீ விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கை அழைப்புகளுக்கு சென்று வருவர். இன்று மாலை, 3:00 மணி முதல், நாளை தீபாவளியன்று காலை, 11:00 மணி வரை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் பணியில் இருப்பர் என, தீயணைப்பு துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE