சத்தியமங்கலம்: தீபாவளியை முன்னிட்டு, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லி கிலோ, 1,070 ரூபாய்க்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதியில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சமீபத்தில், ஆயுத பூஜை, விஜயதசமி என, தொடர்ந்து விசேஷ நாட்களாக இருந்தன. இதனால், பூக்களின் தேவை அதிகரித்து, விலை உயர்ந்தது. ஆயுதபூஜையன்று மல்லிகை கிலோ, 1,200 ரூபாய் வரை விற்றது. அதன்பின்னர், 200 ரூபாய்க்கும், முல்லை கிலோ, 180 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லி கிலோ, 1,070 ரூபாய், முல்லை கிலோ, 780 ரூபாய், ஜாதிமல்லி, 750 ரூபாய், சம்பங்கி, 100 ரூபாய்க்கு விற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE