சேலம்: சேலத்தில் மூன்று இடங்களில், ஒலி, காற்று மாசு அளவீடு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனால், பட்டாசு வெடிப்பதால், ஏற்படும் ஒலி, காற்று மாசை அளவீடு செய்ய, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சேலம் ராஜாஜி சாலை, கொண்டலாம்பட்டி உள்பட மூன்று இடங்களில், 'நாய்ஸ் மீட்டர்' கருவி, 'ரெசிபிரபிள் டஸ்ட் சேம்லர்' கருவிகள் பொருத்தப்பட்டு அளவீடு செய்யப்படுகின்றன. இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூறியதாவது: தீபாவளியன்று, காலை, 6:00 முதல், 7:00 மணி, இரவு, 7:00 முதல், 8:00 மணி வரை பட்டாசு வெடிக்க அரசு அனுமதித்துள்ளது. தீபாவளிக்கு முன், ஏழு நாள், பின், ஏழு நாள் என, 14 நாளுக்கு காற்றின் தரம் அளவீடு செய்யப்படுகிறது. மக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த மாசுப்படுத்தும் தன்மையுடைய பட்டாசுகளை வெடித்து, ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE